அமெரிக்காவின் பிரபல பொப் இசை பாடகர் மைக்கல் ஜக்ஸனின் மரணம் குறித்து ஆராய்ச்சி செய்யும், சால்ஸ் கெலிஷர் என்பவர் தனது அறிக்கையில், மைக்கல் ஜக்ஸன் தனது இறுதி நாட்களில் மிகுந்த மன அழுத்தம் காரணமாக தொடர்ந்து 60 நாட்கள் உறங்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதுவே அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
தனக்கு தெரிந்து உலகிலேயே ஒரு மனிதன் 60 நாட்கள் தொடர்ச்சியாக தூங்காமல் இருந்தது மைக்கல் ஜக்ஸனாகத்தான் இருக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். அவரது உறக்கமின்மையே அவரது மரணத்திற்கு முக்கிய காரணம் என தற்போது கூறப்படுகிறது.
மைக்கல் ஜக்ஸனுக்கு சிகிச்சையளித்த டாக்டர் முர்ரே அவரது உறக்கமின்மையை அறியவில்லை என்றும், அதுகுறித்து அவர் எவ்வித சிகிச்சையையும் மேற்கொள்ளவில்லை எனவும் மைக்கல் ஜக்ஸனின் தாயார் கூறியுள்ளார்.